Thursday, March 11, 2021

தைப்பூச திருநாள்

ஆறுதலை வேண்டி
ஆறுதலை நாடி நின்றது
நூறுதலை...

கமல நயனனும்
கமல சயனனும்
கோரினர் வேண்டுதலை
அசுரனின் கோறுதலை...

விடைஏறும் எம்மான்
விடாய் தீர
திறந்தான் 
மூன்றாம் கண்
தோன்றாக் கண்...

கண் கண் தோன்றியது
நெருப்புப் பொறி - அது
வெற்றியின் திரி
அசுரனைக் கோறும் பொறி...

பிறந்தான் முருகன்
ஆண் மகன்
ஆண்மகன்
ஆணழகன்...

தோன்றினான் 
ஆறு வடிவில்
நம் கறைகளை, குறைகளை 
களையும்
ஆறு வடிவில்...

ஆறின் பலன்
அணையில் உச்சம்.
ஆறு உருவை
அணைத்து
ஆறு முகமாக்கினாள்
அன்னை...

வல்லசுரனனைக் 
கொல்லாது
வாகனமாக்கி
வானவரைக் காத்தான்
வடிவேலன்
கார்த்திகேயன்...

ஓம் முருகா...
ஓம் முருகா...

No comments: