மண்ணில்
மகவாய் வந்தநாள் முதல்
மனமொரு ஈரத்துணி.
உலக வழக்கமெனும் காற்று
உலர்த்த உலர்த்த அது
உயரப் பறக்க எண்ணும்.
அற நினைவும்
அவன் நினைவும்
அதைக் காக்கும் க(ரு/வ்)வி
உலர உலர, அவனையது
உணரவேண்டும் - அன்றேல்
அந்தோ பரிதாபம் - அது
நூலறுந்த காத்தாடி
கை தவறிய கண்ணாடி
அனுதினமும் அவனை நினை
அதுவே உனைகாக்கும் அணை
No comments:
Post a Comment