Saturday, August 21, 2021

கம்பரின் எழுத்தாணி பேசினால்

 எம் குலத்தார் நிற்கின்றனர் 

என் முன்னே நாணி - காரணம் 

நான் கம்பரின் எழுத்தாணி. 


ஆதவ குலத்தில் உதித்த 

மாதவனை பாடியதால் - நானும் 

பார் புகழும் பிரம்ம ஞானி. 


அழகைக் கூட்டும் பொன்ஆணி - நான் 

அருளைக் கூட்டும் ஞானத் தோணி. 


மற்றவை ஓலை கிறுக்கும் வேளை 

மானிடரின் தலைக் கிறுக்கலை 

சரிசெய்தது என் வேலை. 


ராமன் கை பிடித்தது ஒரு ராணி - அக்கதை எழுத 

கம்பர் கைக் கொண்டது ஒரு ஆணி...