Friday, November 1, 2013

தப்பு

நான் ஒரு சொந்த விசயமாக தாம்பரத்தில் train-ஐ பிடிக்க லோக்கல் train-யில் கிண்டியிலிருந்து போய்க்கொண்டு இருந்தேன். நாங்கள் ஏறிய பெட்டியில் கானா பாடல் பாடும் குழு ஒன்று இருந்தது. அவர்கள் தங்களுடைய வாத்தியங்களில் practice செய்து கொண்டு இருந்தனர்.எனக்கு அவர்களருகில் உட்கார இடம் கிடைத்தது.

அவர்கள் பாடலுக்கு நான் என் கைகளில் தாளம் போட்டபடி ரசித்துக்கொண்டு இருந்தேன். அந்த குழுவில் இருந்த ஒருவர் என்னை அணுகி, நான் நன்றாக தாளம் போடுவதாக கூறி, அவருடைய "தப்பை" கொடுத்து அதில் ட்ரை பண்ண சொன்னார். நான் முடியாதென மறுக்க, அவர் என்னை ஆரம்பத்திலிருந்து கவனித்து வருவதாகவும், நான் மிகவும் நன்றாக கைகளில் தாளம் போட்டதாகக் கூறி என்னை வாசிக்க வற்புறுத்தினார்.

நான் என்னுடைய வாயை வைத்துக்கொண்டு சும்மா இராமல், என்னுடைய தாத்தா, அந்நாளில் "டேப்" எனும் வாத்தியத்தில் வருடாவருடம் நிகழும் காமன் பண்டிகையில்* மதன் எறிந்தாரா ? இல்லையா? என்று    கச்சேரி செய்து இருக்கிறார் என்று சொல்லவும், அவர் இது தான் சமயமென அவருடைய "தப்பை" என் கையில் திணித்து எனக்கு பிறவியிலேயே அக்கலை வரும் என்று சொல்லி என்னை  வாசிக்கச்  சொன்னார்.

நானும் ஏதோ ஒரு குருட்டு தைரியத்தில் வாசிக்க நினைத்து ஒரு விரலால் ஒரு தட்டு தட்டினேன்.. அவ்வளவு தான்..... அது டர்ரென கிழிந்து விட்டது......


*
காமன் பண்டிகை -
http://en.wikipedia.org/wiki/List_of_Indian_folk_dances#Kamandi_or_Kaman_Pandigai
http://www.hindu-blog.com/2010/02/kaman-pandigai-holi-in-tamil-nadu.html